×

மார்கழி மாத கோல டிப்ஸ்…

நன்றி குங்குமம் தோழி

மார்கழி மாதமென்றால் வாசலில் வண்ணக் கோலங்கள் இடுவது இன்றும் வழக்கமாக உள்ளது. கிராமங்கள் மட்டுமில்லாமல் நகர்புறத்திலும் மார்கழி மாதம் முழுதும் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கோலங்கள் பளிச்சிடுவதை காண முடியும்.

* மாக்கோலமிட மாவு அரைக்கும் போது சோற்றுக் கஞ்சி சிறிது கலந்தால் கோலம் பளிச்சென்று இருக்கும்.
* சுண்ணாம்புப் பொடியுடன் மஞ்சள் பொடி கலந்து சிறிது நீர் விட்டுக் கரைத்தால் கோலத்துக்கு கரைகட்ட காவி தயார்.
* சலித்த கோலப்பொடியுடன், மைதா மாவு கலந்து கோலக் குழாயில் நிரப்பி கோலம் போட்டால் குழாய் சீராக உருளும்.
* கோலமாவுடன் பச்சரிசி மாவு கலந்தால் கோலம் வெண்மையாக, பளிச்சென்று இருக்கும்.
* பச்சரிசியை ஊறவைத்து கெட்டியாக அரைத்து, தாம்பாளத்தில் கொட்டிக் காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது நீரில் அந்தப்
பொடியைக் கரைத்து அழகான மாக்கோலம் போடலாம்.
* கோலம் போட்டதும், செம்மண் அல்லது காவியை ஓரங்களில் மட்டும் (அ) நடுவில் கூட பூசலாம்.
* வாசல் மரப்படியை செம்மண் பூசிவிட்டு, கோலம் போட்டால் பளிச் சென்றும் இருக்கும். மணமும் வீசும்.

– ஆர். பத்மப்ரியா, திருச்சி.

The post மார்கழி மாத கோல டிப்ஸ்… appeared first on Dinakaran.

Tags : Thanksgiving ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...